செல்வி மேடம்... நிருபர்களிடம் இப்படியா நடந்துக் கொள்வீர்கள்?

செல்வி மேடம்... நிருபர்களிடம் இப்படியா நடந்துக் கொள்வீர்கள்?

ம.பா.கெஜராஜ்,

  அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா என்ன என் வீட்டு பங்க்ஷனா! அடாவடியாக பேசிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் என்கிற தலைப்பில் ஒரு செய்தி வாட்ஸாப் குழுக்களில் வலம் வந்தது.

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி கிராமத்தில் MGNREGS திட்டம் 2023 மற்றும் 2024 ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வியிடம் நிருபர்கள் அங்கான்வாடி கட்டி முடிக்கப்பட்டது குறித்தும், நிகழ்ச்சிக்கு  ஏரி வேலையில் இருந்த பெண்களை அழைத்து வந்துள்ளது குறித்தும் சில விவரங்களை கேட்டனர்.

 அதற்கெல்லாம் விவரம் அளிக்கக்கூடிய இடத்திலிருந்து சம்மந்தப்பட்ட அலுவலர் செல்வி, செய்தி சேகரிக்க  முனைந்த நிருபர்களைப் பார்த்து, உங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்வதற்கு இது என்ன என்னுடைய வீட்டு பங்க்ஷனா? உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் சொல்லுங்கள் இல்லையென்றால் இங்கிருந்து கிளம்புகள் என கடிந்துக் கொண்டார்.

 இந்தச் சம்பவம் தொடர்பாக நிருபர்கள் மட்டுமின்றி அங்கு இருந்தவர்களும் மனக்கஷ்டம் அடைந்தனர்.  

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.தர்பகராஜ் அவர்கள் முறையான விசாரணை மேற்கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செய்தி சேகரித்த விவரம் கோரிய நிருபர்களிடம் கடிந்து பேசும் இந்த அதிகாரி பொதுமக்களிடம் எப்படி நல்ல முறையில் அணுகுவார்? எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

 இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி செல்வி அவர்களிடம் விவரம் அறிய பேசிய போது, ஒரு சில நிருபர்கள் மீது பழி சுமத்தும் வகையில் திசை திருப்பி பேசினார்.