மனித எலும்புக் கூட்டை வைத்து திருஷ்டி கழிக்கும் "மோடி மஸ்தான்" பூஜை!

 கு.அசோக்,

 அம்மனுக்கு மனித எலும்புக்கூட்டை வைத்து திருஷ்டி கழிக்கும் மோடி மஸ்தான் எனும் வினோத பூஜைகளை நடத்தி ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்ந்த பொதுமக்கள். (என்னமா ஹேப்பியா இருக்காங்க வீடியோவை பாருங்கள்)  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள திருவள்ளுவர் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில்.

 இங்கு 95-ஆம் ஆண்டு வைகாசி மாத கூழ் வார்த்தல் திருவிழாவில் ஊரில் உள்ள பெண்கள் பலரும் பால்குடம் எடுத்தும் இளைஞர்கள் ஏராளமானோர் உடம்பில் அலகு குத்தியும் பங்கேற்றனர். விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

 தொடர்ந்து விழாவின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் அம்மன் மற்றும் ஊருக்கு திருஷ்டி கழிக்கும் வகையில் மனித எலும்பு கூடுகளை வைத்து அப்பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் மோடி மஸ்தான் எனும் வினோத பூஜைகளை நடத்தினர்.

 அதில் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு முகத்தில் விபூதி பூசிக்கொண்டும், கருப்பு புடவை அணிந்து காட்டேரி உருவம் கொண்ட ஒரு நபரிடம் சேர்ந்து ஆடினர்.

  ஆட்டம் பாட்டம் என அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் குழந்தைகள் பெண்கள் என அனைவரும்  திருவிழாவை குதுகலமாக கொண்டாடி அம்மனை வழிபட்டனர்.

 மேலும் இந்த மோடி மஸ்தான் எனும் வினோத திருஷ்டி கழிக்கும் பூஜைகளை 95 ஆண்டுகளாக நடத்தி வருவதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

   அந்த மனித எலும்பு கூடு எங்கிருந்து கிடைத்தது மக்களே?