பீகாரை போல் தமிழகத்திலும் சாராயம் இல்லாமல் அரசு நடக்கனும்! எச்.ராஜா பேட்டி!

பீகாரை போல் தமிழகத்திலும் சாராயம் இல்லாமல் அரசு நடக்கனும்! எச்.ராஜா பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

பீகாரில் சாராயமில்லாமல் அரசு நன்றாக நடக்கிறது - தமிழகத்திலும் அதை போல் செய்ய முதல்வர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என  வேலூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி.

வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் நடந்தது.

  இதில் பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் மாநில செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் பாபு  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து 64 பேர் இறந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை. சபாநாயகர் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்வலையை நெறிப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது.

  எதிர்க்கட்சிகள் இல்லாமல் நீங்கள் மட்டும் இருப்பதா? இந்த அரசாங்கத்திற்கு இந்த பிரச்சணையை மறைக்க வேண்டும் என்ற தீய நோக்கம் வெளிப்படையாக தெரிகிறது. அம்மாவட்ட ஆட்சியரே முதலில் இந்த சம்பவத்தை மறைக்க முயன்றார்.

 சி.பி.சி.ஐடி விசாரணை என்பது கண் துடைப்பு, நியாயம் இருக்காது! ஆகவே சிபி,ஐ விசாரிக்க வேண்டும். மடியில் கணம் இருந்தததால் தான் ஸ்டாலினுக்கு பயம் இருக்கிறது. கலெக்டரே மறைப்பதற்காக செயல்பட்டார் என அரசாங்கம் ஒப்புகொண்டுள்ளது.

  அரசாங்கம் நேர்மையாக நடக்க வேண்டும் விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும். காவல்துறை கள்ளச்சாராய ரெய்டு சென்றால் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு என கள்ளச்சாராயம் காய்ச்சியவன் வீட்டிலேயே ஒட்டியிருக்கிறது.

  கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விடியல் தருபவர் என்றுதான் அர்த்தம்.

 பாஜக ஆர்பாட்டத்தை தடை செய்து கைது செய்தனர், இருப்பினும் சமூக ஊடகங்களில் இந்த விஷயம் தெரிந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழக காவல்துறை மோசமான மாநில அரசுக்கு நடக்கிறது. காவல்துறை பெண் போலீசை தவறாக பேசியது தப்பு தான்.

  ஆனால் நிதியமைச்சரை பற்றி தப்பாக பேசியவர் மீது நடவடிக்கை இல்லை. இந்த அரசு விஷ சாராய அரசு, காவல்துறையினர் பாஜக சார்பில் புகார் அளித்தும் மத்திய நிதி அமைச்சரை கேவலமாக பேசியவரை கைது செய்யவில்லை.

 கூட்டணி பற்றி பேச கூடிய அதிகாரம் பாஜக மேலிடத்திற்கு தான் உள்ளது சென்ற முறையை விட திமுக வாக்குகள் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. பாஜகவின் வாக்கும் அதிகரித்துள்ளது ஆகையால் பாஜக வளர்ச்சி என்பது மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

  கள்ளச்சாராயம் குடித்து இறந்த குடும்பங்களுக்கும் தாய் தந்தையை இறந்த குடும்பத்திற்கும் அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

 சாராயம் இல்லாமல் பீகார் அரசு நடக்கிறது முதல்வர் பொறுப்புணர்வுடன் நல்ல குடிமகனாக நடந்துகொள்ள வேண்டும் என சொன்னார்.