போலிசான்று மூலம் அரசு பணி செய்தவர் டிஸ்மிஸ்- வழக்கு பதிவு- தலைமறைவு!

போலிசான்று மூலம் அரசு பணி செய்தவர் டிஸ்மிஸ்- வழக்கு பதிவு- தலைமறைவு!

  கு.அசோக்,

 ஆற்காடு அருகே பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலியாக தயாரித்து ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வந்த நபரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடும் பணியில் தீவிரம்.

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேலகுப்பம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் (49) கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஆற்காடு யூனியனுக்குட்பட்ட டி.சி.குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வந்த அவர் தற்போது கீழ் குப்பம் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

 இந்த நிலையில் கிருபாகரன் போலியான பத்தாம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பணியில் சேர்ந்து இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவின் பேரில் ஆற்காடு பி.டி.ஒ தலைமையில் விசாரணை நடைபெற்றது.

 அதில், கிருபாகரன் போலியான பத்தாம் வகுப்பு சான்றிதழ் பயன்படுத்தி இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் வளர்மதி கிருபாகரனை டி.சி.குப்பம்  ஊராட்சி செயலாளர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 மேலும் ஆற்காடு பி.டி.ஓ பாஸ்கர் போலியான பத்தாம் வகுப்பு சான்றிதழ் வைத்து பணியில் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட கிருபாகரன் மீது ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் கிருபாகரன் மீது ஐபிசி 420.468. 470. என மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தால் மற்றும் ஆவணங்கள் பயன்படுத்துதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் போலி சான்று கொடுத்து பணியில் இருந்த கிருபாகரன் தலைமறைவாக விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் மும்மூருமாக ஈடுபட்டு வருகின்றனா.