ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைப்பணம்!

ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைப்பணம்!

கு.அசோக்,

வீட்டின் சுவற்றில் ஏரி குதித்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகை 4 லட்சம் ரொக்கம் கொள்ளை.- மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைப்பணம் பறிபோனது.

  வேலூர் மாவட்டம், காட்பாடி குமரப்பா நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (38) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

   இளங்கோ வீட்டின் உள்ளே சென்று பார்க்கும்பொழுது மூன்று பீரோக்களில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் வீட்டினை புனரமைப்பு பணி செய்ய வைத்திருந்த ரூபாய் 4 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

  மொத்தம் நகை பணம் என சேர்த்து சுமார் 14 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் பணமும் கொள்ளை போனது. இளங்கோ அளித்த புகாரின் பெயரில் காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சம்பவ இடத்திற்குச் சென்ற காட்பாடி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.