செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவில் தீர்மானமா? என்ன ஆனது சமாதானம்?

செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவில் தீர்மானமா? என்ன ஆனது சமாதானம்?

த.நெல்சன்,

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு சொந்த ஊரில் எதிர்ப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  கடந்த சில வாரங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

   எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தெரிவிக்கும் மாறுபட்ட கருத்துகளும், அவர் தலைமையில் நடக்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதும் அதிமுகவினர் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. எடப்பாடியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டுவது, பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவது, சபாநாயகரை தனியாக சந்தித்து பேசியது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

 ஆனால் எடப்பாடி அழைக்கும் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். சட்டப்பேரவையில் எடப்பாடியை சந்திப்பதையும், எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்க்கிறார். இதற்கிடையே, செங்கோட்டையன் நாகரிகம் இல்லாதவர் என்று வைகை செல்வன் கூறியதால் டென்ஷனான ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

  மூத்த தலைவர்கள் வார்த்தை போரால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செங்கோட்டையனை சமரசம் செய்ய மூத்த நிர்வாகிகள் மூலம் எடப்பாடி முயற்சித்தார். அவர்கள் செங்கோட்டையனை தனியாக சந்தித்து பேசி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

 இருந்த போதும்  மோதல் தொடர்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க துடிக்கும் பாஜக வுக்கு எடப்பாடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் எடப்பாடி சமூகத்தை சேர்ந்த செங்கோட்டையனை முன் நிறுத்தி தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிடு,கிறது.

  அதன்படி, அதிமுக மாஜி அமைச்சர்கள் பலர் செங்கோட்டையனை முன் நிறுத்த சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மூத்த நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து, எடப்பாடியை எதிர்க்க உங்களால் தான் முடியும்.

  அதற்கான சக்தி உங்களுக்குத்தான் இருக்கிறது. எனவே, நீங்கள் அவருக்கு எதிரான குரலை எழுப்புங்கள். பல்வேறு நெருக்கடி வரும். ஆனால், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

   இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவருமே பாஜக வுடன் கூட்டு சேரவேண்டும் என உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

   தலைவர்கள் எல்லாரும் பாஜக வுக்கு ஆதரவாக இருந்தாலும் தொண்டர்கள் அதை விரும்பவில்லை.

  எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரும் நெருக்கடி கொடுப்பதன் மூலம் தான் அவர் கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர கொண்டு வருவார். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அந்த இடத்தில் செங்கோட்டையனை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  இந்நிலையில் செங்கோட்டையனுக்கு எதிராக பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைலன்ட்டாக புயலை கிளப்பியுள்ள செங்கோட்டையனுக்கு அவரது சொந்த ஊரில் எதிர்ப்பு குரலை கொண்டுவர முடிவு செய்துள்ளனராம்.

  இதற்காக எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் களம் இறங்கிவிடப்பட்டிருக்கிறார்.

 யுள்ளார். அவர் ரகசியமாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

 செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவரது பொறுப்புக்களை பறிக்க வேண்டும் எனவும் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள நிர்வாகிகளை வைத்தே பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் திட்டமாம்.

  திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். என்ன குற்றச்சாட்டுகள் செங்கோட்டையன் மீது சுமத்தப்படும்?