ஊரீஸ் கல்லூரி பேராசிரியர் அன்பழகன் மீது செக்ஸ் புகார் எதிரொலி! தப்பி தலை மறைவு ஆனார்!

ஊரீஸ் கல்லூரி பேராசிரியர் அன்பழகன் மீது செக்ஸ் புகார் எதிரொலி! தப்பி தலை மறைவு ஆனார்!

த.நெல்சன்,
வேலூர் மாவட்டம், வேலூரில் நூற்றாண்டை கடந்த கல்லூரி ஒன்று ஏழை எளியவர்களுக்காக செயல்பட்டு வருகிறது.

 
அதன் பெயர் ஊரிசு கல்லூரி என்பதாகும்.

இந்தக் கல்லூரியின் துணை முதல்வராகவும், பொருளாதாரத் துறை தலைவராகவும் பணிபுரிபவர் ப.அன்பழகன். அதே கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளராக 37 வயது பெண் பணியாற்றி வந்தார். அவருக்கு அன்பழகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்தப் பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நாடி புகார் அளிக்க முயற்சி செய்தபோது அங்கு புகார் ஏற்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

எனவே அன்பழகனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் டி ஐ ஜி தேவராணிஅவர்களிடம் அளித்த புகாரின் பேரில் அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதாவுக்கு உத்தரவிட்டார். 


 இதைத்தொடர்ந்து, அன்பழகன் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அன்பழகன் தப்பி தலைமை வாய் இருக்கிறார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.


இந்நிலையில் இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து அன்பழகனை காப்பாற்றும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


கடந்த ஆண்டு சென்னையில் நடந்த கொலை வழக்கில் சிக்கி இருப்பவர்களின் கூட்டாளி என உளவுத்துறையால் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு ஆசிரியர் இந்த வேலையை செய்து வருகிறாராம்.


அதேபோல் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் நெருக்கம் வைத்துக் கொண்டிருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு துறை தலைவரும் பேராசிரியரும் இந்த வேலையை செய்து வருகிறாராம்.
அது சரி.