எஸ்.பி.- கலெக்டர் என் பேச்சை கேட்கனும்...அதிகாரிகளை மிரட்டிய மா.செ திமுகவிலிருந்து நீக்கம்!

எஸ்.பி.- கலெக்டர் என் பேச்சை கேட்கனும்...அதிகாரிகளை மிரட்டிய மா.செ திமுகவிலிருந்து நீக்கம்!

 எம்.முனுசாமி,

  தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து பி.தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

   "தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.தர்மசெல்வன் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆ. மணி, பி.காம்., பி.எல்., எம்.பி., அவர்கள் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

   மேற்படி நீக்கப்பட்ட தர்மசெல்வன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில் நீக்கப்பட்டதற்கு அதிகாரிகளை மிரட்டும் அவரது பேச்சே காரணம்.

  எஸ்.பி. கலெக்டர் எவனாக இருந்தாலும் நான் சொல்வதை கேட்டு ஆகனும் இல்லைன்னா அவ்வளவுதான் என்று கடந்த வாரம் கட்சியினர் மத்தியில் அவர் பேசியது நினைவிருக்கலாம்.

    இது பற்றி திமுக தலைமை விசாரித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது