இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு! சமூக ஆர்வலர் கொலை வழக்கின் எதிரொலி!

இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு! சமூக ஆர்வலர் கொலை வழக்கின் எதிரொலி!

வி.வீரராகவன்,

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கை உரிய வகையில் கையாலாத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூரை சேர்ந்தவர் ஜெகபர் அலி.  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். சமூக ஆர்வலரான இவர் திருமயம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு எதிராக புகார்கள் அளித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அவரது கிராமத்தின் அருகே டூவீலரில் வந்தபோது மினி லாரி மோதியதில் உயிரிழந்தார்.

    ஆனால் அது விபத்து அல்ல, கல்குவாரி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் காசிநாதன், ராசு, அவரது மகன் தினேஷ், ராமையா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இஒருந்த போதும் இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்கிற புகார் நிலவியது. ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு, கோப்புகள் சிபிசிஐடி போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டது.

  ஆகவே தற்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தில் உள்ள ஜெகபர்அலியின் இல்லத்திலிருந்து சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி இளங்கோ ஜென்னிங்ஸ் தலைமையில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். சிபிசிஐடி போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஜெகபர் அலியின் மனைவி மரியம் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

   மேலும் சிபிசிஐடி போலீசார் ஜெகபர்அலி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, காவல்துறையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்ன நோக்கத்திற்காக ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டார்? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர்.

  அப்படியிருக்க ஜெகபர் அலி வழக்கை சரிவர விசாரிக்காத காரணத்திற்காக திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார் நேற்று உத்தரவிட்டார்.

ஷேம்...ஷேம்.