ஒயின்ஷாப்புக்கு ரோடு போடுறீங்க ஊர் மக்களுக்கு போட மாட்டீங்களா மக்கள் மறியல்

ஒயின்ஷாப்புக்கு ரோடு போடுறீங்க ஊர் மக்களுக்கு  போட மாட்டீங்களா மக்கள் மறியல்

குஅசோக்,

ஒயின்ஷாப்புக்கு ரோடு போட தெரிஞ்சவங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ரோடு போட தெரியலையா என்று கிராமத்தினர்கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வி.டி.கே நகர்  அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

 இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை போட ஜல்லி கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்பொழுது வரை முறையான சாலை வசதி செய்து தரவில்லை.

 இதனால் அடிக்கடி பள்ளி கல்லூரி மற்றும் அன்றாட பணிக்கு செல்பவர்கள் வயதானவர்கள் கர்ப்பிணிகள் சாலையில் தவறி விழுந்து விடுகின்றனர்.

இது பற்றி சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் கூட எந்த நடவடிக்கை எடுக்கவில்லை .

எனவே அப்பகுதி மக்கள் இன்று காட்பாடி சேர்க்காடு சாலையில் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளையும் கற்களையும் வைத்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அப்பகுதி பெண்கள் கூறுகையில் அருகில் உள்ள ஒயின் ஷாப் செல்வதற்கு சாலை போடும் அதிகாரிகள் ஏன் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலைகள் போட முன்வருவதில்லை.

 இது என்ன ஒதுக்கப்பட்ட இடமா? என கேள்விகளை முன் வைத்தனர்.

 மேலும் அப்பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண்களை கொள்ளையடித்து செல்வதாகவும் குற்றச்சாட்டை வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தேங்கி நின்றது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.