ஊரிசு கல்லூரி மாணவர்களின் கண்தானம் விழிப்புணர்வு ஊர்வலம்!

கு.அசோக்,
கண் தானம் பற்றி கல்லூரி மாணவர்களின் உதவியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூரில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஊரிசு கல்லூரி இணைந்து கண் தானம் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண் தானத்தின் அவசியம் குறித்த கூட்டம் நடத்தியது.
தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் எம்பெருமாள் கோபிநாத், டாக்டர் ஐசக் அபிரகாம் ராய், மற்றும் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
மேலும் இதில் கல்லூரி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை,ஆரணி சாலையின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஊரிசு கல்லூரியை அடைந்தது.
அனைத்து வயதினரும் கண்தானம் அளிக்கலாம், இதன் மூலம் பார்வையற்றோர் எண்ணிக்கை குறையும் இறந்தவர்களும் கண் தானம் செய்யலாம் ஆகியவைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.