செக்ஸ் வெறி பிடித்த எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஹெல்ப்லைன் அறிவிப்பு!

செக்ஸ் வெறி பிடித்த எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஹெல்ப்லைன் அறிவிப்பு!

எஸ்.செல்வராஜ்,

கர்நாடகாவில் கிளம்பியுள்ள செக்ஸ் ஸ்கேன்டல் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை நடத்திவருகிறது. மேலும் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஹெல்ப்லைன் வெளியிடப்பட்டிருக்கிறது.   முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரது தந்தையும் சட்டமன்ற உறுப்பினருமான மஜத எம்.எல்.ஏ எச்.டி.ரேவண்ணா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

 பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண்ணை கடத்திய வழக்கில்  கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 இந்த கடத்தல் வழக்கின் முதல் குற்றவாளியான ரேவண்ணாவை, அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் வீட்டில் வைத்து கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேவண்ணா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் சனிக்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய எஸ்.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

   ஞாயிற்றுக்கிழமையான நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால், நேற்று மாலை கோரமங்களாவில் உள்ள பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரா கட்டிமணி வீட்டில் அவர் முன் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

  அப்போது எஸ்.ஐ.டி தரப்பில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஒரு நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டதால் இனி விசாரணை நடத்த எதுவுமில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ரேவண்ணாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

  இருதரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதி, ரேவண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேவண்ணா, இது அரசியல் சதி என்றும், தன் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் இருந்ததில்லை. இந்த வழக்கிலும் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறினார்.

 அதே போல், எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் கூறினார்.

  பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய ஹெல்ப்லைன் எண் 6360938947 அறிவிக்கப்பட்டிருக்கிறது.