ஜிஎஸ்டி பெயரில் பல்லாயிரம் கோடி மோசடி! கொலை மிரட்டல் வரை நீளூம் புகார்கள்!

ஜி.கே.சேகரன்,
ஜிஎஸ்டி என்கிற சரக்கு சேவை வரியை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான கோடி ரூபாவை அரசுக்கு வருவாய் இழப்பை ஒரு மோசடி கும்பல் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூ, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடி அதிகமாக நடந்து வருகிறது.
இந்த மோசடிக்கு சம்மந்தப்பட்ட சில அதிகாரிகளும் துணை போவதாக தெரிகிறது.
ஆடு மேய்ப்பவர்கள், ஓட்டலில் சப்ளையர் வேலை செய்பவர், பீடி சுற்றும் தொழிலாளி போன்றவர்கள் இரண்டு கோடி, மூன்று கோடி வரிபாக்கி வைத்திருப்பதாக நோட்டிசுகள் பறந்துக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகிறார்கள்.
அப்படியென்றால் இதற்காக பெரிய நெட்வொர்க் இயங்கி வருகிறது.
அதற்கு வேலூர் மாவட்டம், பேர்னாம்பட்டு தான் தலைமையிடம் என்று கூறப்படுகிறது.
இந்த குட்டி ஊரில் விமான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருப்பதாக ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் சாகிர் என்பவர்தான் தாதாவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் மேலும் பலர் இதில் ஈடுபட்டு ஏழை மக்களிடம் ஆதார் கார்டுகளை பெற்றும் இப்படி மோசடி செய்து வருகிறார்கள். இவர்களில் அரசியல்வாதிகளும் உள்ளனர்.
இந்த ஊரைப் பொறுத்தவரை அடுத்த வேலைக்கு சோறு இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த பலர் இப்படி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டு கோடிகளில் புரள்கிறார்கள். ரவுடிகளின் பின்னணியில் நடைபெறும் இந்த பிசினஸிக்கு மூலக்காரணமாக உள்ள பலர் பெங்களூருவில் பதுங்கிக்கொண்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்களை இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் மைனாரிட்டி சேர்மன் மீது 20 கோடி ஜிஎஸ்டி மோசடி கொலை மிரட்டல் என அடுக்கடுக்காக புகார் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த முகமது முஜம்மில் வாணியம்பாடியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் மைனாரிட்டி சேர்மன் அஸ்லாம் பாஷாவிடம் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், முகமது முஜம்மில் ஆதார் மற்றும் பேன் கார்டை பயன்படுத்தி (பாரம் இன்டர்நேஷனல் கம்பெனி) நிறுவி அதன் மூலம் 20 கோடிக்கு வரி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என ஆவணம் முகமது முஜம்மில் வந்துள்ளது.
இது குறித்து அஸ்ஸலாம் பாஷாவிடம் கேட்கும் பொழுது, இதெல்லாம் கேட்கக்கூடாது வேலை செய்யும் ஆள் நீ எனக் கூறி மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த முகமது முஜம்மில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதேபோல் வாணியம்பாடி ஹாஜி தெரு பகுதியைச் சேர்ந்த முகமது காசிப்(23) என்பவரும் ஜிஎஸ்டி மோசடியில் அஸ்லாம் பாஷா ஈடுபட்டுள்ளதாக புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செங்கன் திப்பு சுல்தான் தெரு பகுதியைச் சேர்ந்த பஸ்லு என்ற நபரும் அஸ்லாம் பாஷா என்னை அலுவலகம் அழைத்து கத்தி கட்டி மிரட்டினார்கள் எனக் கூறி புகார் அளித்தார். மேலும் முன்னாள் காங்கிரஸ் மைனாரிட்டி சேர்மன் அஸ்லாம் பாஷா மீது அடுக்கடுக்காக புகார் எழுத நிலையில் மூன்று பேர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.