பாலாற்றில் குரோமியம் கழிவை கலக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள்! வேடிக்கைப் பார்க்கும் மாசுகட்டுபாட்டு வாரியம்!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவு நீர் கலப்பதாக ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் பெரிய களேபரம் செய்யப்போவதாக கொந்தளிக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாரப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் 12 தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பாமல் நேரடியாக பாலாற்றில் கலந்துவிடப்படுகிறது.
இதனால் ஆற்று நீர் முழுவதும் நுரை படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மழை பெய்யும் நாட்களில் இதே நிலை தொடர்ந்து வருகிறது.
இதனால் பாலாற்று நீரை பயன்படுத்தும் விவசாய நிலங்கள் குரோமியம் படந்த பூமியாக மாறி வருகிறது.
ஆகவே, பாலாற்றில் தோல் கழிவு நீரை கடக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலமுறை பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகத்தினர் பெயரளவில் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பாலாற்றில் இறங்கி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யா, போராட்டக்காரர்களே உங்களின் குரல் மாசுகாட்டுபாட்டு வாரிய அலுவலகர்களுக்கு எதிராக முழுங்க வேண்டும்! அப்படியும் அவர்கள் செவி சாய்க்கவில்லை எனில் பிரதமரை தலைவராகக் கொண்ட "நீரி" என்கிற அமைப்புக்கு புகார் தெரிவிக்கலாம். அதற்கு ஆதாரமாக குறிப்பிட்ட அந்த நுரைபொங்கும் தண்ணீரை பாட்டில் அடைத்து அளிக்க வேண்டும்.
இதற்காக இலவச உதவி ஏதும் தேவைப்பட்டால் 98423 - 29166 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.