20 மனு கொடுத்து மனமிறங்காத முன்னாள் ஆட்சியர்கள்!

ஜி.கே.சேகரன்,

 மனு கொடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக தேவையானதை வழங்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தேர்த்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர் மூவருமே அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

 கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் மின்கம்பி  மீது பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதால் தற்பொழுது மாற்றுத்திறனாளியாக உள்ளார்.

 ஆகவே வேலைக்கும் போக முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

  இந்நிலையில் தங்களுக்கு அரசு சார்பில் மூன்று சக்கர வாகனம் வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை மணுக்கள் கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை வழங்கவில்லை எனவும் இதனால் எனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு முடியவில்லை என வேதனையோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

   அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி அடுத்த வாரம் திங்கட்கிழமை அவருக்கு இரு சக்கர வழங்க வேண்டுமென அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் ரேஷன் கார்டில் தற்பொழுது 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கி வருவதாகவும் அவற்றை மாற்றி 35 கிலோ வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

  அதனை தொடர்ந்து மாவட்ட வட்ட வளங்கள் அதிகாரியை அழைத்து இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.ஒரு ஆண்டு காலமாக மனு கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.