அரசு அளித்த வளைகாப்பு சீர்!
கு.அசோக்,
அனைக்கட்டு மற்றும் கேவிக்குப்பத்தில் சமுதாய வளைகாப்பு விழாவானது நடைபெற்றது
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், ஆகியோர் நேற்று அணைக்கட்டு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அணைக்கட்டு வட்டாரத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணிதாய்மார்களுக்கு சீர்வரிசைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், அணைக்கட்டுசட்டமன்ற உறுப்பினரும் வழங்கினார்கள்.
இதே போல கேவிகுப்பத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சமுதாய வளைகாப்பினைகுத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கேவி.குப்பம் வட்டாரத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணிதாய்மார்களுக்கு சீர்வரிசைகளை மாவட்ட ஆட்சித்தலைவரும் வேலூர்நாடாளுமன்ற உறுப்பினரும் வழங்கினார்கள்.