அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய் செய்தி! ஆர்.எஸ்.எஸ் .பிரமுகர் கைது!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
அரசுப் பள்ளியில் திமுகவினர் சாராயம் காய்ச்சியதாக பொய் செய்தியை பரப்பிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் சரவண பிரசாத் என்பவரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்பும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்கவில்லை.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கள்ளச்சாராய வியாபாரிகள் 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். காவல்துறை உயரதிகாரிகள் பலர் அதிரடியாக சஸ்பெண்ட்டும், பணியிடமாற்றமும் செய்யப்பட்டனர்.
இந்த நிலைமையை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை விதைக்கும் எண்ணத்துடன் பல வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.
அப்படியிருக்க, சில வாரங்களுக்கு முன்பு திமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டிருந்த தைப்போல சிலர் அரசுப் பள்ளி வளாகத்தில் சாராயம் காய்ச்சுவதை போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வேகமாக பரவி வந்தது.
இந்த புகைப்படத்தை வைத்து பலர் முதல்வரையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதுகுறித்து பல்லடம் திமுக அமைப்பினர் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இது போலியான புகைப்படம் என்பது தெரியவந்தது.
ஃபோட்டா ஷாப் உதவியுடன் போலியாக இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் துணையுடன் போலீஸார் விசாரணையில், கோவையை சேர்ந்த சரவண பிரசாத் என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகரே இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
மேற்படி சரவண பிரசாத் போல பலர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக படுபாதக செயலை செய்து வருவது ஆபத்தானது என்பது மறுப்பதற்கில்லை.