போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ய வேண்டுமா?வாணியம்பாடி சப்ரிஜிஸ்தரார் அலுவலகத்தை அனுகவும்!

போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ய வேண்டுமா?வாணியம்பாடி சப்ரிஜிஸ்தரார் அலுவலகத்தை அனுகவும்!

 ஜி.கே.சேகரன்,

 போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ய வேண்டுமா?வாணியம்பாடி சப்ரிஜிஸ்தரார் அலுவலகத்தை அனுகவும் என்று விளம்பர பதாகைகள் வைக்காத குறை ஒன்று தான் பாக்கி. அந்த அளவுக்கு அங்கு சீட்டிங் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

 அதற்கு சமீபத்திய சம்பவமே சாட்சி.

 தம்பியின் சொத்தை போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து முத்திரை பதிவு செய்த அண்ணன் மீது வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தாய் மற்றும் தம்பி புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 தொடர்ந்து வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்து வருவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஷீத்.  இவருக்கு அதே பகுதியில் 501 சதுர அடியில் சொத்து இருக்கிறது. அதனை அவருடைய  அண்ணன் ஜாவீத் என்பவர் போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து, வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், முத்திரை பதிவு செய்துள்ளார்.

  இந்த ஆள்மாறாட்டம் குறித்து ரஷீத் மற்றும் அவரது தாயார் நசீமா வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

  இதுகுறித்து வாணியம்பாடி சார்பதிவாளர் யாஹியாகானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: போலியான பத்திரங்கள் மூலம் முத்திரை ஆவணம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து விசாரணைக்கு பிறகு ஜாவீத் பதிவு செய்த முத்திரை ஆவணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

   தொடர்ந்து வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்து வருவது வாடிக்கையாகி வருவதால் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.