ஆட்சியரே சொல்லிட்டாங்க? அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வாராம்! அப்போ பாலாறு அணைக்கட்டு சீராயிடும்லே!

கு.அசோக்,

ஆற்காடு அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலாறு அணைக்கட்டு பழுதடைந்துள்ளது.  அரசின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்று புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அதிகாரிகளிடம் கூறினார்.

 ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த திருமலைச்சேரி கிராமம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலார் அணைக்கட்டு உள்ளது.

 கடந்த 2021-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பெய்த கனமழையினாலும் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாகவும் பாலாறு மற்றும் பொன்னையாற்றில் அதிக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.

  இதன் காரணமாக பாலாறு அணைக்கட்டினுடையா நீர்¢ வெளியேற்றும் பகுதிகள் மிக மோசமாக சேதம் அடைந்தது. இதன் காரணமாக பாலாறு அணைக்கட்டின் கீழ் புறத்திலுள்ள முதல் தளம், இரண்டாம் தளம் மூன்றாம் தளம் மற்றும் கற்களினால் ஆன தளம் ஆகியவை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 7 மீட்டர் ஆழம் வரை அரிப்பு ஏற்பட்டு மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

 மேற்படி அணைக்கட்டு சேதமடைந்துள்ள பகுதிகளை சரி செய்திடவும்  புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ரூபாய் 200 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் பணிக்கான வடிவ ஒப்புதல் பெறப்பட்டு இப்பணிகளை மேற்கொள்ள உலக வங்கி நிதி கோரி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

 இதன் காரணமாக பாலாறு அணைக்கட்டினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது அவருடன் நீர்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பழுது சரிபடுத்துவது குறித்து அவர்களிடம் ஆட்சியர் விவாதித்தார்.   

  மேலும் இது குறித்து உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாலாறு அணைக்கட்டு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அதிகாரிகளிடம் கூறினார்.

 மேற்படி பாலாறு அணைக்கட்டு மூலமாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குட்பட்ட 319 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது நினைவுகூறத்தக்கதாகும்.