மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி அரசுக்கு எதிராக பேசுவதா? ஆளுநரை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்பாலு அறிக்கை!

மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி அரசுக்கு எதிராக பேசுவதா? ஆளுநரை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்பாலு அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,

  மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக பேசுவதா என்று ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பரபரப்பாக கூறியிருக்கிறார்.

 திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும், மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் சாதிய தலைவர்களாக மாற்றிவிட்டதாகவும் ஆட்சியாளர்கள் மீது குற்றம்சாட்டினார். மேலும், சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று சொன்னவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள் என்றும் ஆளுநர்  பேசினார்.

 ஆர்.என்.ரவி தமிழக அரசை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு திமுக தரப்பில் இருந்து டி.ஆர்.பாலு காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அவர் வெளியிட்ட அறிக்கையில், "நீட் விலக்கு சட்ட முன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்துக்கு அவர் செய்கின்ற துரோகம்" ஆகும். 

   ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள் எனவும், அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக, மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

 பாஜக தலைவர்கள் எப்படி பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.

தமிழகத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் எங்கே போனார் என்றும், அந்த ஊர்திகளை எல்லாம் தமிழகம் முழுவதும் பயணிக்க வைத்து, ஒட்டுமொத்த தமிழக மக்களும் அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சியை ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த ரவி மறந்து விட்டரா?

 அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை.

    திமுக அரசு சுதந்திர போராட்ட வீரர்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்ட அவர், "பாஜகவின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், 'திராவிடம்' என்ற சொல். விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி.

 துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழகத்தின் வரலாறு" என்றார்.

 பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் என்நன்றி கொன்றார்கும் குறளை படித்திருக்கிறார்.

 அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றித் திரியும் ஆளுநர்தான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர். தமிழக மக்களின் வரி பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு, தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு, திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.

 இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி அரசியல்வாதியாக, ஏன் பாஜகவின் தலைவராகவோ, ஆர்எஸ்எஸ் தலைவராகவோ ஆகட்டும்" என்று கடுமையான வார்தைகளை அந்த  அறிக்கையில் பிரயோகித்துள்ளார்.

 

 

 

பேசுவதா? ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்பாலு அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,

  மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக பேசுவதா என்று ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பரபரப்பாக கூறியிருக்கிறார்.

 திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும், மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் சாதிய தலைவர்களாக மாற்றிவிட்டதாகவும் ஆட்சியாளர்கள் மீது குற்றம்சாட்டினார். மேலும், சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று சொன்னவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள் என்றும் ஆளுநர்  பேசினார்.

 ஆர்.என்.ரவி தமிழக அரசை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு திமுக தரப்பில் இருந்து டி.ஆர்.பாலு காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அவர் வெளியிட்ட அறிக்கையில், "நீட் விலக்கு சட்ட முன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்துக்கு அவர் செய்கின்ற துரோகம்" ஆகும். 

   ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள் எனவும், அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக, மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

 பாஜக தலைவர்கள் எப்படி பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.

தமிழகத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் எங்கே போனார் என்றும், அந்த ஊர்திகளை எல்லாம் தமிழகம் முழுவதும் பயணிக்க வைத்து, ஒட்டுமொத்த தமிழக மக்களும் அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சியை ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த ரவி மறந்து விட்டரா?

 அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை.

    திமுக அரசு சுதந்திர போராட்ட வீரர்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்ட அவர், "பாஜகவின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், 'திராவிடம்' என்ற சொல். விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி.

 துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழகத்தின் வரலாறு" என்றார்.

 பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் என்நன்றி கொன்றார்கும் குறளை படித்திருக்கிறார்.

 அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றித் திரியும் ஆளுநர்தான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர். தமிழக மக்களின் வரி பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு, தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு, திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.

 இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி அரசியல்வாதியாக, ஏன் பாஜகவின் தலைவராகவோ, ஆர்எஸ்எஸ் தலைவராகவோ ஆகட்டும்" என்று கடுமையான வார்தைகளை அந்த  அறிக்கையில் பிரயோகித்துள்ளார்.