எடப்பாடியாரை கொக்கி போட்ட செய்தியாளர்கள்!

உ.சசிகுமார்,
அதிமுக பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளிக்கும் போது அவரிடம் கேள்வி கேட்டு செய்தியாளர்கள் கொக்கி போட்டார்கள்.
பா.ஜ.கவுடன் எப்போது கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்கிற கேள்விக்கு, நான் ஏற்கனவே பல முறை தெளிவாக சொல்லிட்டேன். பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இப்போது மட்டுமல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு பிறகு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜகவுடன் அதிமுக நிச்சயம் கூட்டணி வைத்துக் கொள்ளாது. அதிமுகவின் தலைமையில் மெகா கூட்டணியை அமைத்து நாங்கள் இனி தேர்தல்களை சந்திப்போம்.
திமுக இந்த விஷயத்தில் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை குழப்பி வருகிறது.
பாஜகவுடன் அதிமுக மறுபடியும் கூட்டணி வைத்துவிடும் என்றும், நாங்கள் பாஜகவின் பி டீம் என்றும் கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அது உண்மை அல்ல. அதிமுக மேல் உள்ள பயத்தில் இப்படியெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் கூறுகிறேன். திமுக - காங்கிரஸ் உறவு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சியிலும், மிசாவிலும் தான் ஸ்டாலின் ஜெயிலுக்கு போனது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அப்படிப்பட்ட காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல, 1999-இல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அப்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த முரசொலி மாறனை இலாக்கா இல்லாத மத்திய அமைச்சராக எத்தனை காலம் திமுக வைத்திருந்தது. பதவிக்கும், அதிகாரத்திற்கும் எந்த அளவுக்கு கீழே செல்ல முடியுமோ அந்த அளவுக்கு திமுக செல்லும். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளும். அது குடும்பக் கட்சி தானே. அவர்களுக்கு ஆட்சிதான் முக்கியம். மக்களை பற்றி அவர்கள் ஏன் நினைக்கப் போகிறார்கள்? என்று எடப்பாடி பழனிசாமிளந்த பேட்டியில் சொன்னார்.