சோழர் கால கல்வெட்டு கண்டு பிடிப்பு!

  சோழர் கால கல்வெட்டு கண்டு பிடிப்பு!

கு.அசோக்,

 வள்ளிமலை அருகே நேற்று கண்டெடுக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் நேரில் ஆய்வு கல்வெட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 வேலூர்மாவட்டம்,வள்ளிமலை அருகே நேற்று கி.பி. 10ஆம் நூற்றாண்டு  (இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன்) இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் இரண்டு கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டானது தமிழிலும், கன்னடத்திலும் ஓரே செய்தியைக் குறிப்பிடுகிறது.

 மத்திய தொல்லியல் துறையின், கல்வெட்டு பிரிவைச் சேர்ந்த முனிரத்தினம், இயக்குனர்அவர்களின் வழிகாட்டுதலின் படி, நாகராஜன், கல்வெட்டாய்வாளர், மற்றும்  அழகேசன், உதவியாளர்களால்,நேற்று இரண்டு கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர்.

 இந்த தகவல் கிடைக்கப்பெற்ற வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் இன்று வள்ளிமலைக்கு நேரில் சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்.

 கல்வெட்டுகளை அவரிடம் ஒப்படைத்தனர் இந்த கல்வெட்டுகள் வேலூர் அரசு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லபடுகிறது.

  இதுகுறித்து வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், வள்ளிமலையில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டானது கிடைத்துள்ளது. இது தமிழிலும் கன்னடத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது இந்திய தொல்லியல் துறை மூலம் தகவல் பெறப்பட்டு பின்னர் நாங்கள் ஆய்வு செய்தோம் இதனை எடுத்து சென்று அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தவுள்ளோம் என கூறினார்.