அதிகார எல்லையை காரணம் காட்டி அலைக்கழிக்கப்பட்ட புகார்தாரர்! ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறைந்த விலையில் வீடு கட்டி தர வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது புகாரை பெறாமல் போலிசார் அலைக்கழித்ததால் ஆத்திரம் போலீசார் எல்லை பிரச்சனை காரணமாக புகார் பெறாமல் தாமதம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பஷீராபாத் பகுதியை சேர்ந்தவர் சையத் அஷ்வாக். இவர் கட்டிடம் கட்டி தரும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் சையத் அஸ்வாக்கிடம் சென்று தனக்கு குறைந்த விலையில் வீடு கட்டி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.அதற்கு 21 லட்சம் பேசி வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.
அதன் பின்னர் வீடு முடிவடையும் தருவாயில் மீதி பணம் கேட்டுடிருக்கிறார்.
அதற்கு பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சையத் அஷ்வாக் காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு இணை தேசிய ஒருங்கிணைப்பாளர் சையத் புரான் என்பவரின் உதவி கேட்டுள்ளார். இந்த நிலையில் சையத் புரான் தன் காரில் சென்ற போது கோனாமேடு என்ற இடத்தில் இப்ராஹிம் சையத் புரான் காரை வழிமறித்து இரும்பு ராடை வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சையத் புரான் மற்றும் சையத் ஆஷ்வாக் ஆகிய இருவரும் இப்ராஹிம் மீது புகார் கொடுக்க வாணியம்பாடி நகர காவல் நிலையம் சென்றனர்.
அங்கு போலிசார் எல்லை பிரச்சனை காரணமாக நகர காவல் நிலையம் கிராமிய காவல் நிலையம் என மாறி மாறி புகார் பெறாமல் அலைக்களிதுள்ளனர்.
இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக காக்க வைத்ததால் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று சேர்ந்து நகர காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கு சென்ற வாணியம்பாடி டி.எஸ்.பி விஜயகுமார் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து புகாரினை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.