ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய் தகவலை கண்டித்த சி.எஸ்.ஐ. சினாட் மன்றம்!திருமாவளவன் ஆதரவு

Ma.ba.Gajaraj,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பள்ளிப் படிப்பை தாண்டாத ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் மத மாற்றத்துக்காகவே பிரிட்டீஷ் அரசால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர்கள், திராவிட மொழிகள் குறித்து கால்டு வெல் எழுதிய நூல் போலியானது என்று விமர்சனமும் செய்தார். இந்நிலையில் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சி.எஸ்.ஐ. சினாட் மன்றம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடத்தியது.
முன்னதாக, ஆளுடரின் பேச்சுக்கு வைகோ மற்றும் திருமாவளவன் போன்றவர்கள் கண்டனங்களை தெரிவித்ததுடன், ஆளுநர் சொன்ன தகவல்கள் பொய் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி வெளியிட்டனர். குறிப்பாக இதற்காக அமைக்கப்பட்ட உண்மையறியும் குழு இதை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கண்டித்த தெரிவித் சி.எஸ்.ஐ. சினாட் மன்றம் போராட்டம் நடத்தியது.
தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டவில்லை என்பது பொய் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதுபற்றி உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கால்டுவெல் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை. அவரது படிப்புத் தொடர்பான தவறான தகவல்களை கூறுகிறார்கள் என தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும்.
நெல்லை மாவட்டம் இடையன்குடி பகுதியில் உள்ள பேராசிரியர் கால்டுவெல் ஆய்வு மையத்தின் பிரதிநிதிகள் தமிழறிஞர் கால்டுவெல் கல்வித் தகுதி தொடர்பான சான்றிதழை பகிர்ந்திருக்கிறார்கள். அதில், ராபர்ட் கால்டுவெல் பி.ஏ என்றும், திராவிட மொழிகளுக்கு அவர் ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு டிப்ளமோ வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு சான்றிதழில் கால்டுவெல் எம்ஏ பட்டம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிஞர்கள் கால்டுவெல், ஜி.யு.போப் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சிஎஸ்ஐ சினாடு மாமன்றம் சார்பாக சென்னை, வள்ளுவா கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறிஞர் கால்டுவெல் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். பல முனைகளில் இருந்தும் அவரது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. இவ்வாறு தேர்தல் நேரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது சங் பரிவார் அமைப்புகளின் யுக்திகளில் ஒன்று.
அந்த வகையில் ஆர்எஸ்எஸ் தொண்டனாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முஸ்லிம்களை சீண்டுவதைபோல கிறிஸ்தவர்களையும் சீண்டுகிறார். அந்த போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்த கருத்துக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார்.