சிஏஏ சட்ட அமலை மாநில அரசு தடுக்கவே முடியாது! உள்துறை அமைச்சர் திட்டவட்டம்!

ம.பா.கெஜராஜ்,
மத்திய அரசின் வரம்பில் உள்ள சிஏஏ வை மாநில அரசு எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வியெழுப்பியிருக்கிறார்.
சிஏஏ தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று மு.க.ஸ்டாலின், கேராளாவின் பினராயிவிஜயன், மம்தாபானர்ஜி போன்றவர்கள் கூறியிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதை மறுத்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவது உறுதி,
இந்த சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டமல்ல, இந்து கிறிஸ்தவ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே இந்த சட்டம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிஏஏ பற்றி மாநில முதல்வர்கள் சொல்வது சரியா? உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதில் உண்மையிருக்கிறதா? மாநில முதல்வர்கள் சிஏஏ அமலை தடுக்க முடியுமா என்பதைப் பற்றி சிறப்பு கட்டுரை உங்கள் லைவ்லுக் டிஜிட்டல் இதழில் இன்று மாலை வெளியாகும்.
-தொடரும்,