கலெக்டர் ஆபிசுக்கு வெடி மிரட்டல்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் மூலம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறைக்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மெட்டல் டிடெக்கர் மற்றும் அக்னி என்ற மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் ஐந்து தளங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைக்கு பின்னர் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது இதனால் அரசு ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.