ஆதீனத்தை ப்ளாக் மெயில் செய்த பாஜக தலைவர் அகோரம் கைது!

க.பாலகுரு,
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதீனகர்த்தரின் சகோதரர் புகா£ அளித்தார். அதில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொழிலதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் இந்த குற்றச்செயலுக்கு மூளையாக செயல்பட்ட பாஜக மாவட்ட தலைவர் அகோரம் எஸ்கேப் ஆகிவிட்டார். இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இது ஒருபுறம் இருக்க அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தனிப்படை போலிசாரால் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாக பணம் கேட்டு பிளாக் மெயில்! பாஜக தலைவர் - உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு!