மரியாதைக்குரிய பிரதமர் சிறிய வார்த்தைகளை கூறியுள்ளார்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மரியாதைக்குரிய பிரதமர் சிறிய வார்த்தைகளை கூறியுள்ளார்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி

G.K.Sekaran,

பிரதமர் நரேந்திரமோடிமதிப்புக்குரியவர்,சாலச் சிறந்தவர்அப்படிப்பட்டவர்சிறியவார்த்தைகளை பயன்படுத்துவது அவருக்கு அழகல்ல என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே  பொன்னையாற்றின் குறுக்கே மாநில நிதி,  திட்டத்தின் கீழ் ரூபாய்  12.94 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்திற்கு புதிதாக தரைப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

அந்தப் பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,மேல் பாடி பகுதியில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி ரூபாய் அளவில் கட்டப்பட்டது.

ஆனால் வெள்ளத்தின் காரணமாக பாலம் உடைந்து போனது.

அதன் பிறகு தற்போது 12.94கோடி மதிப்பீட்டில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது . இந்த பாலம் மிகவும் பலம் வாய்ந்தது.

மேலும் இந்த பகுதியில் உள்ள சாலை பணிகள்தேர்தல் முடிந்தவுடன்சரி செய்யப்படும்.  என்று பேசினார்.


பின்னர் செய்தியாளர்கள், அமைச்சர் துரைமுருகனிடம், .திமுகவும் காங்கிரசும் ஊழல் கூட்டணி அதனை வீழ்த்துவது என்னுடைய முதல் வேலை என பிரதமர் கூறியுள்ளாரே என  கேள்வி எழுப்பினர்.

 அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில்,  பிரதமர் மிகுந்த மரியாதைக்குரியவர் ,அவர் சாலச் சிறந்தவர்.,அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது அவ்வளவு பெரியவர்களுக்கு அழகல்ல என்றார்.

 பின்னர் , தேர்தல் பத்திரத்திற்கும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு ,அதற்கு அமைச்சர்
பதில் அளிக்க மறுத்துவிட்டார்