ஆ..வின்! ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனம்! தினமும் 2,500 லிட்டர் பால் ஏப்பம்! பாமக நிறுவனர் பரபரப்பு அறிக்கை!

ஆ..வின்! ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனம்! தினமும் 2,500 லிட்டர் பால் ஏப்பம்! பாமக நிறுவனர் பரபரப்பு அறிக்கை!

ஜி.கே.சேகரன்,

 வேலூர்மாவட்டம்,  வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமான ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது.

  வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தியாகும் பால் இங்கு கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  இதில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வேன்களை இயக்கி தினசரி 2500 லிட்டர் பால் நூதன முறையில் தினமும் நஷ்டம் ஏற்படுத்தி வந்தது தெரிந்தது.

   இதுகுறித்து கடந்த பல நாட்களாக கண்காணித்து ஒரே எண்ணில் இரண்டு வேன் கள் இருப்பதை கண்டறிந்து அவைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்துள்ளனர்.

  இப்படி பல லட்சம் பால் திருடு நடந்திருப்பதால் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பாலின் அளவு குறைந்து வந்ததால் இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 இது குறித்து பா.ம.க.நிறுவனர் மருத்துசர் ச.ரமாதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் நஷ்டப்படுத்தப்பட்டிருக்கிறது.

  கடந்த பல ஆண்டுகளாக இந்த இது நடைபெற்று வந்திருக்கிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால்  ஆவினுக்கு நஷ்டமாகியிருக்கிறது.

  அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஆவின் இந்த மோசடியை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளை பயன்படுத்தி ஆவின் பால் கொண்டு செல்லப்பட்டதால், ஐயம் எழவில்லை என்றும், அதனால் தான் இதை நீண்டகாலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆவின் உயரதிகாரிகள் சார்பில் கூறப்படுவதை ஏற்கமுடியாது.

 ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் எதிலுமே பால் திருட்டு கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

   வேலூர் சத்துவாச்சாரி பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மேலாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் முதல் காவல்துறை தலைவர் நிலையிலான அதிகாரிகள் வரை இருந்திருக்கின்றனர்.

 அவர்களை மீறி எந்த முறைகேடும் நடந்திருக்க முடியாது. ஆனால், பல ஆண்டுகளாக வேலூர் ஆவினில் பால் முறைகேடு நடைபெற்றிருப்பதால் அதற்கு உயர்பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு இருந்திருக்கலாம் என்று ஐயங்கள் எழுப்பப்படுவதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.

 ஆவின் நிறுவனம் மக்களுடன் ஒருங்கிணைந்த நிறுவனம் ஆகும். ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வலுப்படுத்தப்பட்டு அசைக்க முடியாத பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். ஆனால், சுயநலமும், பேராசையும் கொண்டவர்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆவின் நிறுவனம் சுரண்டப்பட்டே வந்திருக்கிறது.

 இதற்கு முன் ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது; இப்போது பெருமளவில் பால் முறைகேடு நடந்திருக்கிறது.

  இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.