நிருபர்களை எச்சரித்த அக்யூஸ்ட்! தேவையில்லாமல் மாட்டிக்காதீங்க என சவுண்டு!

க.பாலகுரு,
தேவையில்லாமல் மாட்டிக்காதீங்க, வழக்கு விடுதலை ஆனால் நிருபர்கள் மீது கேஸ் போடுவேன் என்று குற்றம்சாட்டப்பட்ட நபர் மிரட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (சிறிகீஞி -ணிணி) செயற்பொறியாளராக பணியில் உள்ளார். இவர் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது இவருக்கு, மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாட்டை புரோக்கர் ஒருவர் செய்திருக்கிறார்.
அவர்கள் கடந்த 6 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும் போதும் குடும்ப வறுமையை காரணம் காட்டி ªங்கடேசனிடம் சிறுக சிறுக சுபாஷினி பணம் பெற்றுள்ளார். அப்போது ஒருமுறை இருவரும் தனிமையில் இருந்ததை கடந்த மாதம் 27-ஆம் தேதி வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார்.
பின்பு கடந்த மாதம் 29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்து தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு தனது கூட்டாளிகளான முகமது நசீர், தினேஷ் பாபு ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே மூலம் ரூ.2.70 லட்சத்தை அவரிடம் இருந்து பெற்றுள்ளனர். மேலும், சுபாசனியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி விரட்டி உள்ளனர்.
இதை குறித்து வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். சுபாசினியை திருவாரூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது நினைவுகூறத்தக்கதாகும்.
இந்நிலையில் அவரை காவல் நிலையத்தில் இருந்து ரிமாண்டுக்கு அழைத்துச்சென்ற போது நிருபர்களை எச்சரித்தார். கேஸ் விடுதலை ஆகிவிட்டால் ரிப்போர்டர்கள் மீது கேஸ் போடுவேன்., சொல்லிட்டேன் சொல்லிட்டேன், தேயைவில்லாமல் நீங்க மாட்டிக்காதீங்க சொல்லிட்டேன் என்று மிரட்டினார்.
தீர்ப்பு வரும்போது அதையும் கவர் செய்துவிட வேண்டியதுதான்.