மத்திய அரசை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியுடன் அதிமுக கூட்டு வைக்க வேண்டும்! எம்ஜிஆர் கனவை அது நிறைவேற்றும்...சைதை துரைசாமி!!

மத்திய அரசை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியுடன் அதிமுக கூட்டு வைக்க வேண்டும்! எம்ஜிஆர் கனவை அது நிறைவேற்றும்...சைதை துரைசாமி!!

ம.பா.கெஜராஜ்,

  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது.

 அண்ணா திமுக என்ற மாபெரும் அரசியல் இயக்கம். 2016 ஆம் ஆண்டு வரை மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக இருந்தது. அதற்குப் பிறகு ஏற்பட்ட தொடர் தோல்விகள் தான்.  இவைகளை எல்லாம் ஆய்வு செய்கின்ற பொழுது மத்திய அரசில் இருக்கும் கூடிய கட்சியுடன் தோழமை வைப்பது கட்சி வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்பை பெற வேண்டும்.

 கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் களத்தில் நின்று அறிந்தவன்.

 சின்ன சின்ன மனக்கசப்புகள் நிலையானது அல்ல. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பது தான் எங்களை போன்றவர்களின் அரசியல் அனுபவம். அந்த வகையில் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தான் எங்களைப்போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு.

52 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பயணம் செய்கிறேன். இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். எதற்காக புரட்சிதலைவர் இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ அதை காப்பாற்ற வேண்டும். இது எதற்காக எனக்கு பதவி வேண்டும் என்பதற்காகவா? இல்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட கனவு அதனை செயல்படுத்துதல் போன்றவற்றை பார்க்க வேண்டும்.

  2016-ம் ஆண்டு கட்சிக்குள் பிரச்சனைகள் வந்த போது, அந்த இணைப்பில் பங்காற்றியவர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்து பணியாற்றினேன் என்பது எடப்பாடி அவருக்கும், சகோதரர் ஓபிஎஸ் அவருக்கும் நன்றாக தெரியும்.அதனால் எதாவது பிரதிபலன் எதிர்பார்த்து நான் செய்தேனா?. 2021-ம் ஆண்டு வரை கட்சிப்பதவியில் இருந்தேனா? அடுத்த தலைமுறைக்கு இந்த இயக்கம் செல்ல வேண்டும் என்றால் இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.

  ஒரு தொகுதியில் தோல்வி, 2 தொகுதியில் தோல்வி என்பதை விட மீதமுள்ள தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பெற வேண்டும். அதாவது உதராணமாக சொல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக வாக்குகள் இரண்டையும் சேர்த்து பார்த்தால் கிட்டத்தட்ட 20 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது.

  தேர்தலில் தோல்வி அடைந்தது உண்மை. ஆனால் அதற்கான காரணங்கள் ஏராளம். மத்தியஅரசுடன் கூட்டணி வைத்து கொண்டால் தொண்டனுக்கு பாதுகாப்பு. அதுதான் புத்திசாலித்தனமான முடிவு. இந்த முடிவைத்தான் எம்ஜிஆர் 10ஆண்டு காலம் கடைபிடித்தார். எம் ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் ஆளுமைத்திறன் இப்போது உள்ள தலைவர்களுக்கு இருக்கா? அவர்களுடன் ஒப்பிடுவதற்கு அரசியல் வரலாற்றிலேயே யாரும் கிடையாது.

  என் எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும், எந்த முயற்சியையும் பயன்படுத்துவேன் இதுதான் அரசியல் சானக்கியத்தனம். வெற்றி பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வெற்றிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை உடனடியாக செய்ய வேண்டும். இதனை எடப்பாடி கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.