புதிய நீதிகட்சி நடத்திய மினி மாரத்தான்! வெற்றியாளர்களுக்கு ரொக்கம்!

புதிய நீதிகட்சி நடத்திய மினி மாரத்தான்! வெற்றியாளர்களுக்கு ரொக்கம்!

 கு.அசோக்,

  குடியாத்தம் ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

 தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பது மற்றும் போதைப்பொருள் குறித்தும் விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டம் ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கி தலைமை தபால் நிலையம் தொடர்ந்து பாபு மஹாலில் முடிவடைந்தது. இதனை  புதிய நீதி கட்சியின் தலைவர் சண்முகம் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 சுமார் 5 கிமீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு புதிய நீதி கட்சியின் சார்பில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் மூன்று இடங்களில் வந்த இளைஞர்களுக்கு சௌந்தர்யா, ரொக்கம், 30,000 இரண்டாம் பரிசாக பாவனா, 20,000 மூன்றாம் பரிசாக சித்ரா, 10,000 அடுத்தடுத்து வரும் ஐந்து பேருக்கு 5,000 வழங்கப்பட்டது கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.