மோடி அடிக்கடி தமிழகம் வந்து எதாவது மீன் சிக்காதா என முயற்சிக்கிறார்! துரைமுருகன் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து எதாவது மீன் சிக்காதா என முயற்சி செய்கிறார் - பாலாற்றின் குறுக்கே அணைக்கடுவது குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது, அப்படி செய்ய கூடாது என ஆந்திர நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் காட்பாடியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி - பாஜக வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று கூறுகிறது இவர்கள் குடும்பம் போல் நடுத்தெரு தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் திராவிட முன்னேற்ற கழக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் சுனில்குமா£,¢ பொறுப்பாளர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு வாக்குசாவடி முகவர்களிடையே பேசுகையில் பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து எதாவது மீன் சிக்காதா என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழக வருகிறார் இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல.
மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள் தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள். மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். இந்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது. அடுத்ததாக பாஜகவினர் வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள் உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள் என பேசினா£.¢
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு நீதிமன்ற வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்டவுள்ளனர். இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது ஆந்திர முதல்வருடன் இதுகுறித்து பேசுவீர்களா என கேட்டதற்கு அவர்கள் வேறு பணியில் இருக்கிறார்கள் என கூறினார்.