தேர்தல் பத்திரம் ரத்து பற்றி சென்னையில் கருத்து தெரிவிப்பாரா மோடி? கம்யூ...ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி!!

தேர்தல் பத்திரம் ரத்து பற்றி சென்னையில் கருத்து தெரிவிப்பாரா மோடி? கம்யூ...ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி!!

  கு.அசோக்,

 தேர்தல் பத்திரங்கள் குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நாளை தமிழகம் வரும் பிரதமர்  கருத்து தெரிவிப்பாரா - தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வென்ற தொகுதிகளை கேட்டுள்ளோம்  மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேலூரில் பேட்டி.

 வேலூர்மாவட்டம், வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் மாவட்ட செயலாளர் தயாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் இக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

  பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி உடன் பாடு பேச்சுவார்த்தை நடத்தி 2 தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் தொகுதிகளும் முடிவாகிவிடும். நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற 2 தொகுதிகளை கேட்டுள்ளோம்.

   டெல்லி உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இண்டியா கூட்டணியின் தொகுதி உடன் பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவை முழுமையாக தோற்கடிக்கபடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுகொண்டிருக்கிறோம்.

  மத்தியில் உள்ள பாஜக அரசு இந்த ஆட்சியில் ஐந்து சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து நாட்டின் அடிப்படை தன்மையை சிதைத்துவிட்டது. குறிப்பாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி வாங்கினால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி ஆயிரக்கணக்கான கோடிகளை இவர்கள் தேர்தல் நிதியாக பெற்றிருக்கின்றனர்.

   அதிலும் குறிப்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவைகளை அனுப்பி மிரட்டி வணிக வரி நிறுவனங்களிடம் அதிக நன் கொடை பெற்றுள்ளனர். இதனால் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அது செல்லாது எனவும், கட்சிகள் நிதி யாரிடம் பெற்றது என்ற விவரத்தை அறிவிக்க கோரியுள்ளது.

  ஆனால் பிரதமரும்,¢ பாஜகவினரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. நாளை (இன்று) பிரதமர் தமிழகம் வருகிறார் தேர்தல் பத்திரம் குறித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பிரதமர் நாளை கருத்து தெரிவிப்பாரா?

  மேலும் பாஜக வீழ்த்த முடியாத சக்தி ஒன்றும் இல்லை பிரதமர் ஏதேதோ பேசுகிறார், பாஜக இங்கு காலூன்ற முடியாது, தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது பாலாறு காவிரி ஆறு பிரச்சணைகளில் தமிழக அரசு வழக்கு நடத்தி முழுமையாக தீர்வு காண ஆர்வம் காட்டுகிறது என்று கூறினார்.