816 கர்நாடகா மது பாக்கெட்டுகள் பறிமுதல்! ஒருவர் கைது இருவர் ஓட்டம்!

ஜி.கே.சேகரன்,

பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 816 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் ஒருவர் கைது இரண்டு பேர் தப்பி ஓட்டம் மதுவிலக்கு போலீசார் விசாரணை.

 வேலூர்மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட் வாங்கி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக குடியாத்தம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

   அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு போலீசார் சுப்பிரமணி என்பவரின் வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில மது பேக்கெட் பாக்ஸ்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 பின்னர் 816 மது பக்கெட்டுகளை பறிமுதல் செய்து சுரேஷ் என்பவரை கைது செய்தனர். மதுவிலக்கு போலீசார் விசாரணையில் மேலும் மதுபான விற்பனை ஈடுபட்ட சுப்பிரமணி மற்றும் ஆசீர்வாதம் இருவரும் தப்பி ஓடியதாக சொன்னார்கள்.

   தப்பி ஓடிய சுப்பிரமணி மற்றும் ஆசீர்வாதம் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திரா கர்நாடக எல்லையோரம் உள்ள சோதனை சாவடிகளில் தொடர்ந்து வெளி மாநில மது பேக்கெட்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி அவரது தொடர்கதையாகவே இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கர்நாடக மாநில மது பேக்கெட்டுகளை பறிமுதல் செய்த சம்பவம் கிராம மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.