பம்பரம் சுழற்றிய கலெக்டர் - எஸ்.பி.!

எம்.ஏ.கண்ணன், கு.அசோக்,

 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அலுவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை கோலாலமாக கொண்டாடினர்.

 தமிழர் திருநாளான தைத்திருநாள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது .

   தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் வருவாய் அலுவலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பாரம்பரிய உடை அணிந்து வந்து  பொங்கல் பண்டிகையை கொண்டாடினர் .

  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்கள் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் அரசுத்துறை அலுவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது .

  பானை உடைத்தல், பம்பரம் சுற்றுதல், கோலி விளையாடுதல், உரியடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் அரசு துறை அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சஜீவனா பரிசுகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம்,

 வேலூர்மாவட்டம்,வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவானது கல்லூரியின் செயலாளர் மணிநாதன் தலைமையில் நடைபெற்றது.

  இதில் புதுப்பானையில் பொங்கல் வைத்து மாடுகளை வணங்கிய பின்னர் பாரம்பரிய விளையாட்டுகளான உரியடி,ஒன்றாங்கல்லாட்டம்,பாண்டி ஆட்டம் ,பம்பரம் விடுதல் ஊஞ்சலாட்டம் ஆகியவைகளுடன் மாணவிகள் உற்சாகமாக  கொண்டாடினர்.

  மேலும் சிலம்பாட்டம்,சுருள் வாள் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் கயிறு இழுத்தல் ஆகியவைகளுடன் பரதம்.கரகாட்டம்,கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகம் பொங்க ஆயிரக்கணக்கான மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை நிகழ்த்தினர்.