எடப்பாடியார் ரூ.2500 கொடுத்ததை மக்கள் மறக்கவில்லை! முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி!

க.பாலகுரு,
பொங்கலுக்கு ரூ.2500 ஐ எடப்பாடியார் கொடுத்ததை மக்கள் மறக்கவில்லை. "முன்னுக்கு பின் முரணாகத்தான் இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. பொங்கல் தொகுப்பில் பணம் கொடுப்பது என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்றைக்கு மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்"
வலங்கைமான் பகுதிகளில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் பகுதிகளில் நியாய விலைக்கடை மற்றும் புதிய அங்காடி கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
வலங்கைமான் பகுதி தொழுவூர் ஊராட்சி செம்மங்குடி பகுதியில் சுமார் 14 லட்சம் மதிப்பீட்டிலும், விருப்பாச்சிபுரம் பகுதியில் 12.50 லட்சம் மதிப்பீட்டிலும், ஆலத்தூர் ஊராட்சி பகுதியில் 12 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய அங்காடி கட்டிடங்கள் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து கேள்விக்கு, முன்னுக்கு பின் முரணாகத்தான் இந்த அரசாங்கம் நடைபெற்று வருகிறது.
கல்வியைப் பொறுத்தவரை அரசாங்கம் எடுத்து நடத்துவதுதான் சாதாரண மக்களை பாதுகாக்க கூடிய நிகழ்வாக இருக்கும் என்றும்,அரசு பள்ளிகள் தான் ஏழை எளிய மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தான் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாணவர்கள் வரக்கூடிய சூழலில், இந்த நேரத்தில் இந்த முடிவை எடுக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி எடுத்தால் அது தவறானது.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் கொடுப்பதை மக்கள் எதிர்பார்த்து இன்றைக்கு மக்கள் ஏமாற்றம் அடைந்து அடைந்துள்ளார்கள். எடப்பாடி முதலமைச்சர் ஆக இருந்தபோது பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. இன்றைக்கும் மக்கள் அதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
இந்த நிகழ்வில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அதிகாரி முரளி, வலங்கைமான் வட்ட வழங்கல் அதிகாரி வெங்கடேஷ், வலங்கைமான் ஒன்றிய பெருந்தலைவர் சங்கர், மற்றும் ஊராட்சி உள்ளாட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.