45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலூர் சரகத்தில் மாற்றம்!

45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலூர் சரகத்தில் மாற்றம்!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் சரகத்தில் 45 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி திரு. சரோஜ்குமார் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் ராணிப்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர்  பார்த்தசாரதி ஆற்காடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், ஆற்காடு இன்ஸ்பெக்டர்   சசிகுமார் ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த திருமதி பேபி வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகவும், நாட்றம்பள்ளி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி லதா சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகவும், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் பொன்னை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகவும், லத்தேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சுரேஷ் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கும், வேப்பம் குப்பம் காவல் நிலையத்தில் இருந்த நாகராஜ் பாகாயம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

மேலும் இவர்கள் உட்பட வேலூர் சரகத்தில் மொத்தம் 45 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் பெற்றுள்ளனர்.