எங்களைப் பார்த்தால் இளக்காரமாக உள்ளதா! வழக்கறிஞரின் ஆபாச பேச்சால் திருப்பத்தூர் போலிசார் வேதனை! இருதரப்பிலும் புகார்...வழக்கு!!
ம.பா.கெஜராஜ்,
பணியில் இருந்த காவலர்களை ஆபாசமாக திட்டித்தீர்த்த வழகறிஞரின் செயலால் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் எங்களைப் பார்த்தால் இளக்காரமாக உள்ளதா என்று திருப்பத்தூர் போலிசார் வேதனையை வெளியிட்டிருக்கிறார்கள். போலீசார் மீது வழக்கறிஞர் தரப்பிலும் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு கூடியிருக்கிறது.
என்ன நடந்தது என்று பார்ப்போம்,
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த லேட் பலராமன் என்பவரின் மனைவி மஞ்சு. இவர் மாருதி கார் ஒன்றை விலைக்கு வாங்கினார்.
அந்த காரை சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்த பைரோஸ்கான் என்பவர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். அப்படி இருக்க அதே காரை மேற்படி இருவரும் கூட்டு சேர்ந்து வேறு நபருக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டனர்.
அதற்காக அவர்கள் போலியாக ஆவணம் தயாரித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் காரை அடமானத்திலிருந்து மீட்க பணத்துடன் கமலகண்ணனையும், பைரோஸ்கானையும் மஞ்சு அனுகினார். அப்போது அவர்கள் மஞ்சுவிடம்ஸ், உனது காரை தர முடியாது, மீறி கேட்டால் உன்னை ஒழித்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது
இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது காரை இவர்களிடமிருந்து மீட்டு தர கோரி புகார் மனுவுடன் வந்த மஞ்ச அங்கு மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் நேற்று காலை கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது இருவருக்கும் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் அந்த கைதான இருவரிடமும் நீதிபதி கேட்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை நெஞ்சு வலிக்குது என கூறுங்கள் என கூறியுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் குடியரசன் ஏன் இது போல் சொல்லிக் கொடுக்குறீங்க இது தவறு என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ் காவலர் குடியரசனை அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
அவரை கோர்ட்டு பெண் ஏட்டு எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் சுரேஷின் கோபம் தனியவில்லை.
அவரது அநாகரீக செயலை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து பரவ விட்டனர். நீதிமன்றத்திலேயே காவலரை ஆபாசமாக பேசிய சம்பவம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருப்பத்தூர் காவலர்கள் தரப்பில் வெளியான தகவலில் 02 ம் தேதி திருப்பத்தூர் நகர காவல் நிலைய குற்ற எண்: 329/2024 ௵/௳ 417,420,486,471 வீஜீநீ வழக்கின் எதிரிகளான. கமலக்கண்ணன் பைரோஸ் ஆகிய இருவரை யிவி -1 திருப்பத்தூர் அவர்களிடம் ஆஜர் படுத்த நீதிமன்ற வளாகத்தில் அழைத்துச் சென்றபோது வழக்கறிஞர் சுரேஷ் த/பெ சுந்தரேசன், திருப்பத்தூர் என்பவர் அவரது கட்சிக்காரரான பைரோஸ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டார்.
நீதிமன்ற காவலுக்காக அழைத்து வரப்பட்டவர்களை காவல்துறையிடமிருந்து தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு காவலர்களை தகாத வார்த்தையால் திட்டி சுவற்றின் மீது தள்ளிவிட்டு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த காரணத்திற்காக எதிரி மீது காவல் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ் கொடுத்த புகார் அளித்தார்.
மேலும், முந்தைய தினம் இரவு கைதி காவலில் இருந்தபோது எதிரி காவல் நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்து தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் அடுத்த காரணம் அடிப்படையில் நிலைய பாராக்காவலர் வினோத்குமார் எதிரி மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார்களின் பேரில் சுரேஷ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலிசார் சிலர் தெரிவிக்கையில், ஏற்கனவே நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ் எஸ்.ஐ என்பவர் இரவு நேரத்ர்தில் வாகனத்தை தணிக்கை செய்யும் பணியில் இருந்தார். அப்போது திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வேலை செய்யும் ஒரு வழக்கறிஞர் குடி போதையில் வந்து எஸ்.ஐ.யிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் மீது டி.டி கேஸ் போடப்பட்டது.
ஆனால் வழக்கறிஞர்கள் ஒன்றாக சேர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்தார்கள். ஆகவே எஸ்ஐ செல்வராஜ் அவர்களை உயர் போலிஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்தனர்.
நாங்கள் எங்கள் டுயூட்டியை செய்கிறோம். அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஆனால் தப்பு செய்தவர்கள் பலவானாக இருந்தால் அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
காவல் துறையினரைப் பார்த்தால் இளக்காரமாக உள்ளதா? என்று சொன்னார்கள்.
இது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் பேசினோம். கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்திருந்தனர். அது பற்றி அவரது வழக்கறிஞர் சுரேஷ் பணியிலிருந்த போலிசாரிடம் கேள்வியெழுப்பினார்.
அதே போல் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த போலிசார் அழைத்து வந்தபோது, அவர்களுடைய வழக்கறிஞர் என்கிற முறையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் வழக்கறிஞர் சுரேஷ், வழக்கு தொடர்புடைய சில விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை அங்கிருந்த போலிசார் ஒருமையில் பேசி அடிக்க கை ஓங்கியிருக்கிறார்கள். இது நீதிமன்ற வளக்கதில் நடந்துள்ளது. அதையெல்லாம் வீடியோ எடுக்காத போலிசார், சுரேஷ் அட்வகேட்டுக்கு ஆத்திரத்தை மூட்டி இப்படி ஒருதலைபட்சமாக வீடியோ எடுத்து குற்றவாளியைப்போல சித்தரித்துள்ளார்கள்.
ஆகவே சுரேஷ் தரப்பிலும் திருப்பத்தூர் ஜெ.எம். 1 நீதிமன்றத்தில் முறையிட்டு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரை மாண்புமிகு மாஜிஸ்திரேட்டு அவர்கள் காவல் நிலையத்துக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார் என்றார்கள்.
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் 3 ஆம் தேதி வரை காவல் நிலையத்துக்கு வரவில்லையாம்.