திருமண நாடகமாடி ஆண்களை ஏமாற்றும் இளம் பெண்! வழக்கு பதிவு! வலைவீச்சு!

ம.பா.கெஜராஜ்,
திருமண நாடகமாடி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த இளம் பெண் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 4-ன் உத்தரவுபடி, விசாரித்து பதியப்பட்ட வழக்கின் விவரத்தை அறிந்த அந்த பலே பெண் அவரது குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர். சைதாப்பேட்டை, மெயின் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சபீர்கான், இவர் தங்கும் விடுதி மற்றும் டிராவல்ஸ் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அப்படியிருக்க அவர்வேலூர் அண்ணா சாலையிலுள்ள வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் என்பவரிடம் புகார் ஒன்றை அளித்து நடவடிக்கை கோரினார்.
புகாரை பெற்று படித்துப் பார்த்த ஆய்வாளர் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
ஆகவே, நீதிமன்றத்தின் உதவியை புகார்தாரர் நாடி பரிகாரம் பெற்றுள்ளார். அதன்பேரில் தான் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
புகார்தாரர் அவரது மனுவில் கூறியிருப்பதாவது, திருமண நாடகமாடி, நம்பிக்கை மோசடி செய்து, ஏமாற்றி என்னிடம் பணம் பறித்து மற்றும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.
என்னுடைய குடும்ப உறுப்பினர் மூலம் அறிமுகமான திரு.நியாஸ் அஹமத் என்பவர் என்னுடன் நெருங்கி பழகி அவருடைய மனைவி ஷபானா, மகள் அன்ஜூம் அவருடைய மச்சான் இலியாஸ் மற்றும் அப்சல் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்கள் அனைவரும் என்னுடைய பொருளாதார வசதியை நன்கு அறிந்து என் மீது மிகுந்த அக்கறை மற்றும் பாசத்துடன் இருப்பது போல் காட்டிக் கொண்டதால், நான் அவர்களை முழுவதுமாக நம்ப ஆரம்பித்தேன்.
பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லி பல்வேறு தருணங்களில் பல லட்சம் ரூபாயை என்னிடமிருந்து வாங்கினார்கள்.
இந்நிலையில் திரு.நியாஸ் அஹமத் அவர்களின் மகள் அன்ஜூம் என்னுடன் தொலைபேசியில் பேசி பழக ஆரம்பித்தாள்.
பின் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவே, நான் ஏற்கனவே திருமணமானவன் என்பதால் மறுத்தேன்.
உடனே அன்ஜூம் என்னை அதிகளவில் காதலிப்பதாகவும், என்னுடன் வாழ்க்கை முழுவதும் வாழ ஆசைபடுவதாகவும், நான் திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.
பின்னர் நான், மேற்படி அன்ஜூம் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பிய நிலையில், அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தாய் ஷபானா, தந்தை நியாஸ், அன்ஜூமின் தாய் மாமா இலியாஸ்,அப்சல் அனைவரும் கூட்டு சதி செய்து திருமண ஆசை காட்டி அவ்வபோது லட்சக்கணக்கில் பெற்றனர்.
பின்னர் அன்ஜூம் உடன் என்னுடைய திருமணம் கடந்த 07/06/2021 அன்று நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் அன்ஜூம், தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்த போது மேற்கண்ட நபர்களின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால அவர்களை கண்காணித்தேன்.
அதை அறிந்த அவர்கள், தீடீரென்று என் தொடர்பை துண்டித்துக் கொண்டு அன்ஜூமை எனக்கு தெரியாமல் அழைத்து கொண்டு காணாமல் போனார்கள்.
சந்தேகப்பட்டு விசாரித்த பின் மேற்கண்ட நபர்கள் இதே போல் பல்வேறு நபர்களை ஏமாற்றி திருமண நாடகமாடி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை அழைத்து வந்து என்னை மிரட்டி , வரதட்சனை வழக்கு, வன்கொடுமை என பொய் புகார் கொடுத்து சிறையில் அடைப்போம் என மிரட்டி ரூபாய் 5,00,000 / - ( ஐந்து லட்சம் ) பிடுங்கினர். இதுவரை என்னிடம் ரூபாய் 30,00,000 / - லட்சம் வரை ஏமாற்றி வாங்கியுள்ளள்ளனர்.
மேற்படி பல செல்வந்தவர்களை ஆசை வார்த்தை கூறி, போலி நாடக திருமணங்கள் செய்து லட்ச கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதை போலவே என்னிடமும் செய்துள்ளனர்.
குறிப்பாக டாக்டர் அப்துல் ஹமித் என்பவரையும் ஏமாற்றி மேற்கண்ட நபர்கள் , ரூபாய் 15,00,000 / - லட்சம் வரை ஏமாற்றி உள்ளனர்.
மேலும் என்னை திருமணம் செய்வதற்கு முன் திரு.அப்துல் ஹமித் என்பவருடன் நடைபெற்ற திருமணத்தை என்னிடம் மறைத்து முறையாக விவாகரத்து பெறமால் என்னை ஏமாற்றி பண மோசடி நம்பிக்கை மோசடி செய்து போலி நாடக திருமணம் செய்து ஏமாற்றிய மேற்கண்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என அவரது புகாரில் பி.சபீர்கான் தெரித்துள்ளார்.
இது குறித்து புகார்தாரர் சபீர்கான் தெரிவிக்கையில், மேற்படி என்னை மோசடி செய்த அந்த அன்ஜூம் பல ஆண்களை ஏமாற்றியுள்ளார்.
அந்த வகையில் வேலூர் சின்ன மசூதி தெருவைச் சேர்ந்த அன்சும் என்பவரையும், கொணவட்டம் இர்பான், விரிஞ்சிபுரம் டாக்டர் அப்துல் அமீத் போன்றவர்களை இதே போல் திருமண நாடகமாடி பண மோசடி செய்திருக்கிறார்.
என் விஷயத்தில் நான் சத்துவாச்சாரியில் அவளை தனிக்குடித்தனம் வைத்திருந்த சூழலில், அவள் எனக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாள்.
பல இடங்களில் தேடிய போது, என்னை திசை திருப்ப என் மீது அபாண்டமாக வீண் பழி போட்டனர். அன்ஜூமை பாலியல் டார்ச்சர் செய்ததாக பொய் புகார் அளித்து ஜெயிலில் போடவைப்போம் என்று மிரட்டி, என்னை திசை திருப்பி ரூ.5 லட்சம் ரூபாயை பறித்தனர். என்னைப் பற்றி டேமேஜாக பேசி கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்தினர். உறவினர்கள், நண்பர்கள், வியாபார தொடர்புடையவர்கள் என அவர்கள் மத்தியில் அவதூறான வதந்திகளை பரப்பினர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தேன்.
மேற்படி அவள் பல செல்வந்தர்களை திருமண நாடகமாடி பணம் பறித்ததும், அதற்காக ஏற்கனவே திருமணம் ஆன ஆண்களை தேர்வு செய்வதும் அவரது பாணி என்பதை அறிந்தேன்.
மேலும் பலரை திருமணம் செய்து கொண்டதற்கான சான்றுகளும் கிடைத்தது.
அவற்றையெல்லாம் சேகரித்த பின்னரே அன்ஜூம் மற்றும் அவரது குடும்பத்தினரின் உணையான முகம் தெரியவந்தது. ஆகவே தான் புகார் அளித்து நடவடிக்கை கோரியிருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் இருந்து விவரங்கள் அறிய முற்பட்டோம், அவர்களது செல் எண்களின் இணைப்பு கிடைக்கவில்லை. அப்படியிருக்க, அவர்கள் தலைமறைவாக உள்ளதாக போலிசார் சொல்கிறார்கள்.