என்னது....? பால் கறக்க கற்று தருவீர்களா! சிரிப்பலையை ஏற்படுத்திய கலெக்டர்!

என்னது....? பால் கறக்க கற்று தருவீர்களா! சிரிப்பலையை ஏற்படுத்திய கலெக்டர்!

  ஜி.கே.சேகரன்,

 நாட்டறம்பள்ளி அருகே பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் அரசு திட்டங்கள் குறித்து சிறப்பு முகாமில் கால்நடை உதவி இயக்குனர் பால் கறப்பது எப்படி என்று சொல்லித் தருகிறேன் என கூறியதைக் கேட்டு 20 நிமிடமாக வியப்பில் இருந்து மீளவில்லை என கலெக்டர் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சின்னமோட்டூர் ஊராட்சியில் பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில்   கால்நடை பராமரிப்பாளர்களுகள் மற்றும் உரிமையாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

  இந்த முகாமினை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் அதிகாரிகள்  பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு பால்வளத்துறை சார்பில் என்ன என்ன திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்து எடுத்து கூறினர்.

அப்போது கால்நடை உதவி இயக்குனர் முரளி சாதானந்தம் கால்நடைகளுக்காக வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் அதனை எவ்வாறு பராமரிப்பது, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் குறித்தும் பேசினார். மேலும், பால் எவ்வாறு கறப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு கற்றுத் தரப்படும் எனவும் கூறினார்.

இதனைக் கூர்ந்து கவனித்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பின்னர் பேசும் போது கால்நடை உதவி இயக்குனர் கூறியது என்னை 20 நிமிடமாக வியப்பில் இருந்து மீண்டு வரவில்லை ஏனென்றால் இந்த முகாமில் மக்களை அமர வைத்து பால் எவ்வாறு கரப்பது என்பது குறித்தும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூறிய¢ இந்த பேச்சு என்னை அதிர்ச்சியிலிருந்து மீண்டு வராத சூழ்நிலையை ஏற்படுத்தியது என பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினா£.¢

அதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ 9 லட்சம் ரூபாயை 25 பயனாளிகளுக்கு தலா ரூ.36 ஆயிரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.