பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது போலிஸ் நடவடிக்கை எடுக்குமா? கிரிவல பக்தர்கள் ஆதங்கம்! அதிகரித்த இல்லீகள் லாட்ஜிகள்!
ம.பா.கெஜராஜ்,
திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்களை மறித்து பணம் பிடுங்கும் திருநங்கைகளின் செயலால் பக்தர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இது பற்றின செய்திகள் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டும் கூட போலிசார் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது பற்றின விவரம் வருமாறு,
திருவண்ணாமலை பௌர்ணமி தினத்தின் போது கிரிவலம் செல்லும் பக்தர்களை திருநங்கைகள் குழுவினர் இடைமறித்து ஆசீர்வாதம் செய்துவிட்டு பக்தர்களின் பாக்கெட்டில் இருந்து பணம் பறித்து வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது. சனிக்கிழமை இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாதா மாதம் பௌர்ணமி தினத்தின் பொழுது வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திருநங்கைகள் கூட்டம் கூட்டமாக வருவதைப் போலவே தற்போதும் வந்தனர்.
அவர்கள் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கு நின்று கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களின் தலையில் கைவைத்து கட்டாயப்படுத்தி பணம் பறித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பக்தர்கள் கிரிவலம் வந்த போது அத்துமீறி பக்தர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சிகள் வெளியானது.
குறிப்பாக கிரிவலப் பாதை இடுக்கு பிள்ளையார் கோவில் அருகே மூன்று திருநங்கைகள் கிரிவலம் வரும் பெண் பக்தர்கள் மற்றும் ஆண் பக்தர்கள் என பாகுபாடு பாராமல் அனைவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் தலையில் கை வைத்து அராஜகமாக பணத்தை பறித்தனர். குறிப்பாக ஆண் பக்தர்களிடம் கேட்காமல் அவர்களின் தலையில் கை வைப்பதும், ஆபாசமாக தொடுவதும், பிறகு அவர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் செயலிலும் ஈடுபட்டனர்.
மன அமைதிக்காகவும், குடும்பம் மேலோங்கவது உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை வைத்துக்கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களை அராஜகமாக தடுத்து நிறுத்தி இது போன்ற செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தும் கூட போலிசார் ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
இது குறித்து திருவண்ணாமலை நகர டிஎஸ்பி திரு.ரவிசந்திரன் தெரிவிக்கையில், இப்படி செயல்படும் திருநங்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்லாம் என்று உயரதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். அடுத்தமாத பௌர்ணமி கிரிவலத்தின் போது இப்படி நடக்காமல் கண்காணிக்கப்படும். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அரெஸ்ட் செய்தால் எந்த சிறையில் வைப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொன்னார்.
சமூக பார்வைக் கொண்ட மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவிக்கையில், பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாஜஸ்வரர் கோவில் உண்டியலில் ஒன்னரை கோடி அளவுக்குத்தான் பணம் விழும். ஆனால் இம்முறை மூனேகால் கோடி பணமும், முன்னூறு கிராமுக்கு மேல் தங்கமும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை படைத்திருக்கிறார்கள்.
அவ்வளவு பணத்தை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒரு வசதியையும் வழங்குவதில்லை. திருவண்ணாமலையைப் பொறுத்தவரைக்கும் வீடுகளை விடுதிகளாக மாற்றி பணம் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட இல்லீகல் விடுதிகளில் ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. குறிப்பாக குடிநீர் வசதியை அவர்களால் வழங்க முடியாமல் திணறுகிறார்கள்.
பார்க்கிங் வசதி அறவே கிடையாது. இவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் பௌர்ணமி தினத்தன்று ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் பெரிய அளவில் உள்ளது. டிரைவருக்கு இருபக்கத்திலும் பெண்களை அமரவைத்துக் கொண்டு உல்லாசப்பயணம் போல் செல்கிறார்கள். இதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.