மக்கள் சேவையில் செவிலியர் பங்கு பிரதானம்...பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு!

கு.அசோக்,
மக்கள் சேவையில் செவிலியர் பங்கு பிரதானம் என்று திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பேச்சு
வேலூர்மாவட்டம், அரியூரில் உள்ள நாராயணி கல்லூரிகள் குழுமத்தில் பயின்ற செவிலியர் மாணவ,மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறைகளில் பயின்று படிப்பை முடித்த மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் விழா நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
மாணவ,மாணவிகளுக்கு நடிகரும் திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பெற்றோர்களும் பங்கேற்றனர்
பின்னர் விழாவில் நடிகரும் திரைப்பட இயக்குநருமான கே,பாக்யராஜ் பேசுகையில் நன்றாக் படிக்க வேண்டும் தற்போது படிக்கும் மாணவர்கள் நீங்கள் நல்லபடியாக படிப்பைமுடித்துள்ளீர்கள்.
ஆனால் நான் இன்னும் படிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் சினிமாவில் எதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர்கள் மருத்துவர்கள் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும் சேவை மனப்பான்மையுடனும் மக்களுக்கு சேவை செய்யும் பணி, அவர்கள் பணி பிரதானம் என பேசினார்.