34 கோடியே 65  லட்சம் செலவில் தொழிற்பயிற்சி மையம்! அமைச்சர் ஆர்.காந்தி திறந்தார்!

34 கோடியே 65  லட்சம் செலவில் தொழிற்பயிற்சி மையம்! அமைச்சர் ஆர்.காந்தி திறந்தார்!

கு.அசோக்,

  இராணிப்பேட்டை தொழிற்பயிற்சி மையத்தில் ரூபாய் 34 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இயந்திரங்கள் மற்றும் மின்சார வாகனங்களை அமைச்சர் ஆர் காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பு

  தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு சார்பில் தமிழகத்தில் 22 இடங்களில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நிறுவப்படுகிறது.

   ரூபாய் 762 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த தொழில் 40-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மையங்களை கொண்டதாகும்.

  இவற்றை சென்னையில் இருந்து இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிலையில் இதனைத்  இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் ரூபாய் 34 கோடியே 65  லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில் பயிற்சி மையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, இ.ஆ.ப. ஆகியோர்  குத்துவிளக்கேற்றி ஏற்றி துவக்கினர்.

 இவற்றை மாணவ மாணவிகளின் நலனுக்காக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து  மையத்தில் இடம் இடம்பெற்றிருந்த இயந்திர கருவிகள் மற்றும் மின்சார வாகனங்களை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் தொழில் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.

   நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் தலைவர் சுஜாதா வினோத் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொழிற்பயிற்சி சார்ந்த அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.