ஸ்டியரிங்கை பிடிக்காமல் பேருந்தை ஓட்டும் அரசு டிரைவர் சஸ்பெண்டு! மக்கள் அச்சம்!

ஸ்டியரிங்கை பிடிக்காமல் பேருந்தை ஓட்டும் அரசு டிரைவர் சஸ்பெண்டு! மக்கள் அச்சம்!

 ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு பேருந்தில் ஓட்டுநர் செல்போன் பேசியப்படிவண்டி ஓட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு நகர பேருந்தில் அரசின் விதிமுறைகளை மீறி ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டி சென்றுள்ளார்.

  மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் திண்றூ கொண்டே கவனத்தை சிதறவிட்டார்.

இதனைக் கண்ட பயணிகள் சிலர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் கையை விட்டுவிட்டு (ப்ளூடூத்) மாட்டிக்கொண்டு மீண்டும் பேசியபடி சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

  அரசு பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசியபடி கையை விட்டு பேருந்து இயக்கி சென்ற காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 இந்நிலையில் மேற்படி ஓட்டுநர் பிரதீப் என்பவரை வேலூர் போக்குவரத்து கழக பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.