வாணிம்பாடி:- மோசடி வழக்கில் சிக்கிய அதிமுக பிரமுகர் ஓட்டம்!

ஜெ.எஸ்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, மாய பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வி.கோவிந்தன். இவர் வாணியம்பாடி. அ.இ.அ.திமுக நகர (து) செயலாளர் ஆக உள்ளார். காதர் பேட்டையில் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் காயலான் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவர் தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். ஆனால் கடனாக வாங்கிய பணத்தை கோவிந்தன் திருப்பி கொடுக்கவில்லை. ஆகவே கோபி தரப்பில் வாணியம்பாடி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ரூ.4.00.000 த்தை பெற்றுத்தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தீர்ப்பின் போது குற்றம் சாட்டப்பட்ட நபரான கோவிந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு நகர காவல் நிலையத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளார்.
அதிமுக பிரமுகர் தப்பியோடிய விவகாரம் அங்கு எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.