இரண்டு பிரபல ரவுடிகள் என்கவுன்டர்! போலிசார் சுட்டனர்!

இரண்டு பிரபல ரவுடிகள் என்கவுன்டர்! போலிசார் சுட்டனர்!

 உ.சசிகுமார்,

 காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் பிரபாகரன்.   காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவர்மேடு என்ற பகுதியை சேர்ந்த இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

 அப்படியிருக்க நேற்று மர்ம நபர்கள் சிலர் பிரபாகரனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்தது போலீஸ். 

 இந்நிலையில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்த ஒரு காரை நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது காரிலிருந்த நபர்கள் போலீசாரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிக்க முயன்றனராம்.

 ஆகவே தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 போலீசாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர் பிரபாகரனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தேமுதிக நிர்வாகி சரவணனின் அண்ணன் ரகு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. காரில் இருந்த ரகுவின் கூட்டாளி பாஷாவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  ரவுடிகள் இருவரும் தாக்கியதில் படுகாயமடைந்த போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.