வேலூர் ராணிப்பேட்டையில் அ .ம மு கஆர்ப்பாட்டம்!

மின் கட்டணம் மற்றும் அனைத்து வரிகள் உயர்வை கண்டித்து வேலூ ர். மற்றும் இராணிப்பேட்டையில் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,அனைத்து வரி உயர்வை கண்டித்தும் ,விலைவாசி உயர்வு மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்,ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான முன்னாள் சட்டமன்ர உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்கள்விலைவாசி வியர்வை கண்டித்தும்போதை கலாச்சாரத்தைஒழிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஏராளமான அமமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஏதிரே தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்களின் அனைத்து வரிகள் ஆகியவற்றை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமமுக கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமமுக கட்சியின் கழக அவைத்தலைவர் கோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதில் மின்கட்டண உயர்வு, மக்களின் வரி உயர்வுகள் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அனைத்து சம்பவங்களுக்கும் பொறுப்பேற்று ஆளும் தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.