துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்- தென் பென்னை ஆற்றுக்கு தமிழக அரசின் முடிவு ஆணையம் அமைக்க வேண்டும் என்பதே எங்களின் முழு எதிர்பார்ப்பு கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது ஏற்பட வாய்ப்பில்லை - அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தான் நாடகம் நடத்துகிறார் - கனிம வளக்கொள்ளை என்பது கடந்த ஆட்சியில் நடந்துள்ளது அது தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது வரவேற்கதக்கது கிளித்தான்பட்டறையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம்,காட்பாடி தொகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் வெற்றி பெற்றதை அடுத்து கிளித்தான்பட்டறை பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன்,பகுதி பொறுப்பாளர் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் பென்னை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் கர்நாடக அரசு ஆணையம் அமைக்க கூடாது என கேட்டுகொண்டதன் அடிப்படையில் வழக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளோம் காரணம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சணைகள் தீர்ப்பது நல்லது ஆனால் பிடிவாதகாரர்களிடம் அது முடியாத காரியம் கர்நாடக தமிழகம் இடையே கிட்டதட்ட 50 முறை பேசிவிட்டோம்.
அதற்கு பிறகு ஆணையம் அமைக்க கேட்டோம், கர்நாடகவுடன் பேசினால் தீர்வில்லை. முல்லை பெரியாறு அணை ஷெட்டரில் நீர் கசிவு என்பது எல்லா அணையிலும் நீர் செல்லும் சிறிய அளவில் அது பிரச்சணை அல்ல.
அம்மா உணவகம் முதல்வர் ஆய்வு நாடகம் என எடப்பாடி பழனிசாமி கூறுவது நாடகம் என்றால், எடப்பாடிக்கு தெரியும் அது அவங்க கட்சியில் நடப்பது தான் நாடகம். கூத்துகாரர்கள் அவர்கள்.
அறநிலையதுறை இடத்தில் 1918 கோடி கனிம வள கொள்ளை நீதிமன்றத்தில் அறநிலையத்துறை சொல்லி இருப்பது வரவேற்கதக்கது. அது முன்னோர் காலத்தில் நடந்தது. அந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் என சொன்னார்.
மேலும் துணை முதல்வர் பதவியை உங்களுக்கு வழங்க வேண்டும் என்று கட்சிக்காரர்கள் விரும்புகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சற்று யோசித்த அவர் கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள். அது நிவாகத்தில் எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
துணைமுதல்வர் பதவிக்கு ஏற்கனவே முன்னுதாரணம் இருக்கேஉங்களுக்கு கொடுக்கலாமே என்றுமீண்டும் செய்தியாளர் கேட்டதற்கு அய்யய்யோ என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு, ஓட்டுநரின் தோளை தட்டி உடனே புறப்படு என்றார்.