சுங்க கட்டணம் கொடுத்தால்தான் வாக்கு இயந்திரங்களை எடுத்துச் சொல்வோம் ஓட்டுநர்கள் தகராறு... தாசில்தார் திரு திரு!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
டோல்கேட் கட்டணம் கொடுத்தால்தான் EVM இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றிச் செல்வோம் என்று ஓட்டுநர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் வாகனங்களில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கான பணிகள் நிறைவடைந்து, வாகனங்களும் மைதானத்திற்கு வந்துவிட்ட நிலையில், அங்கு ஒன்று கூடிய ஓட்டுநர்கள் டோல்கேட் கட்டணம் கொடுத்தால் தான் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றுற்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டாட்சியர் சரவணபெருமாள் அவர்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றால.
இருப்பினும் சுங்க கட்டணம் பிரச்சனைக்கு தீர்வு காண ஓட்டுனர்கள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.